வளர்கிறது – வளர்கிறது தமிழ்நாடு தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் கப்பல் கட்டும் தளம் அமையவுள்ளது: 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு

1 Min Read

தூத்துக்குடி, செப்.23– தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்களை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் கப்பல் கட்டும் தளத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் ரூ. 15,000 கோடியில் வணிக ரீதியிலான கப்பல் கட்டும் தளத்தை தூத்துக்குடியில் அமைக்கிறது. மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம் ரூ.15,000 கோடியில் மற்றொரு கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது.

இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைப்பதன் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த மாபெரும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது வரலாற்று மைல் கல் ஆகும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

புதிதாக தொடங்கப்படும் 2 மெகா திட்டங்களால் கப்பல் கட்டும் தொழிலில் பன்னாட்டு மய்யமாக தமிழ்நாடு அமையும் என தெரிவிக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணியாக திகழ்வதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் காரணம் என கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்கு கப்பல்துறை முக்கியமானது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *