பிராமணர் என்பதால் இட ஒதுக்கீடு இல்லையாம் நிதின் கட்கரி புலம்பல்

கடவுள் எனக்கு செய்த மிகப்பெரிய உதவி என்னவென்றால், நான் ஒரு பிராமணன், இதனால் எனக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று காமெடியாக பலரிடம் கூறுவேன் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், எந்த மனிதரும் ஜாதி, மதம், மொழியால் உயர்ந்தவர் அல்ல, மாறாக அவர்களின் குணத்தாலேயே உயர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பிராமணர் குறித்த நிதினின் கருத்து பேசுபொருளாகியுள்ளது.

ஒரேயொரு முதலமைச்சர் மட்டுமே ஜி.எஸ்.டி.யை எதிர்த்தார்

ஜெய்ராம் ரமேஷ்

2006 -2014 வரை ஒரேயொரு முதலமைச்சர்  மட்டும் ஜி.எஸ்.டி.யை எதிர்த்தார், அவரே பிறகு பிரதமராகி ஜி.எஸ்.டி.யின் பாதுகாவலராக உரு வெடுத்தார் என்று பிரதமர் மோடியை காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஜிஎஸ்டி-யில் சமீபத்திய சீர்திருத்தங்கள் குறைவாகவே உள்ளது என்ற அவர், சிறு குறு தொழில் துறையின் நடைமுறை சிக்கல்களை எளிதாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சீர்திருத்தம் தாமதமானது என்றும் சாடினார்.

இந்திய ரூபாயை இங்கெல்லாம் அப்படியே பயன்படுத்தலாம்

பொதுவாகவே நாம் வெளிநாடுகளுக்கு சென்றால், அங்குள்ள நாணயத்திற்கு ஏற்ப நமது ரூபாயை மாற்றுவோம். ஆனால், நேபாளம், பூட்டான், இலங்கை, சிங்கப்பூர், UAE, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நமது ரூபாய் நோட்டுகளையே பயன்படுத்தலாம். அங்குள்ள உணவகங்கள், ஹோட்டல்கள்  (அறைகள்) டாக்சிகள் ஆகியவற்றில் இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லு படியாகும். இது பொதுவாக சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு கண் மை போடுறீங்களா? அபாயம்!

கண் திருஷ்டிக்காக குழந்தைகளின் கண்களுக்கு சிலர் மை இட்டுவிடுவர். ஆனால் இப்படி செய்வது குழந்தைகளின் கண்களை பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சில கண் மைகளில் இருக்கும் ஈயம் (Lead) நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம் என்கின்றனர். அதோடு, குழந்தைகளின் கண்கள் மென்மையானவை என்பதால் அவர்களுக்கு நோய்தோற்று ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறுகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *