இந்நாள் – அந்நாள்

1985 கலைஞர் தார் சட்டி கொடுத்து
ரயில் நிலையங்களில் ஆசிரியர் ஹிந்தி எழுத்தை அழித்த நாள்

1985-ஆம் ஆண்டு, ரயில் நிலையங்களில் ஹிந்தி பெயர் பலகைகளை அழிக்கும் போராட்டம், திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க  போராட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி இந்தப் போராட்டத்திற்குத் தலைமை வகித்தார். இந்தப் போராட்டத்தை துவக்கி வைக்க, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, கி. வீரமணிக்குத் தார்ச் சட்டியை அளித்து வழியனுப்பி வைத்தார். புலவர் மா. நன்னனும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை ஏகினார்.

போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களில் இருந்த இந்தி எழுத்துக்களை தார் அல்லது கருப்பு மை பூசி அழித்தனர்.

இந்தப் போராட்டம் சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம், திருச்சி, தஞ்சாவூர், கோவை, கடலூர், ஈரோடு, திருநெல்வேலி, திருவாரூர், மதுரை, ஜோலார் பேட்டை போன்ற தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நடை பெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட கி. வீரமணி உட்பட சுமார் 5000-க்கும் மேற்பட்ட திராவிடர் கழகத் தொண்டர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பல குடும்பங்களும் (இணையர்) ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு உணர்வின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கும், ஒன்றிய அரசின் ஹிந்தி திணிப்பு முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் இது ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *