காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரில் அளித்த பேட்டியில், ‘‘மாநிலத்தில் அடுத்து அமையும் அரசை மக்கள் தான் முடிவு செய்ய வேண் டும். ஆனால்,சிபிஅய்,ஈடி,அய்டி என சுருக்க பெயர்களுக்கு பின்னால் ஒளிந்துள்ள ஒரு சிலர் மட்டுமே அடுத்து அமைய உள்ள அரசை தீர்மானிக்கின்றனர். முகம் தெரியாத நபர்களை வைத்து தேர்தல் வெற்றியை தீர்மானிப்பது என்பது நாட்டின் வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்றாகும். ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகிற முயற்சிகளை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.