கற்றல் குறைபாடு! கல்வித்துறை ஆணை

1 Min Read

அரசுப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களின் விவரங்களை அக்.20-ஆம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை கெடு விதித்துள்ளது. ஆசிரியர்கள் பதிவிடும் தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 காசாவில் 91 பேர் துடிதுடித்து மரணம் 

காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 91 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வீடுகள், தங்குமிடங்கள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ரோபோக்கள் இதில் பயன்படுத்தப்பட்டதாகவும், பெருமளவு வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. போரை நிறுத்தக் கோரி, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிலேயே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *