நடிகவேள் எம்.ஆர்.இராதா துணைவியார் கீதா மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல – திராவிடர் கழகத்திற்கும் சோகம் தரக்கூடிய நிகழ்வு! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!

1 Min Read

சென்னை, செப்.22 நடிகவேள் எம்.ஆர்.இராதா  அவர்களின் துணைவியார் கீதா அம்மையார்  மறைவு என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல – திராவிடர் கழகத்திற்கும் சோகம் தரக்கூடிய நிகழ்வு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ,

நேற்று  (21.9.2025) நடிகவேள் எம்.ஆர்.இராதா  அவர்களின் துணைவியார் கீதா அம்மையார் மறைவுற்றார். அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பேட்டியின் விவரம் வருமாறு:

நடிகவேள் எம்.ஆர்.இராதா  அவர்களின் துணைவியார் கீதா அம்மையார் அவர்கள் தனது 80 ஆவது வயதில் மறைந்தார் என்பது, இந்தக் குடும்பத்திற்கு மட்டும் உரிய சோகச் செய்தி அல்ல. திராவிடர் கழகத்திற்கும் சோகம் தரக்கூடிய நிகழ்வாகும்!

நடிகவேள் பெயரில் மன்றம் அமைத்தவர் தந்தை பெரியார்!

தந்தை பெரியார் அவர்கள், நடிகவேள் எம்.ஆர்.இராதா பெயரில் மன்றம்  அமைத்தவர்.

காரணம், நடிகவேள் அவர்கள் சிறையில் இருந்த காலத்திலும் சரி, அவர்கள் வெளியில் இருந்த காலத்திலும் சரி, அவருக்குத் துணையாக இருந்ததோடு, தந்தை பெரியார் அவர்களோடும் அந்த அம்மையார் அவர்கள் மிகுந்த பாசத்தோடு, நேசத்தோடு இருந்தவர்கள்.

அதோடு மட்டுமல்லாமல், அன்பிற் குரிய ராதிகா அவர்களின் தந்தை  நடிகவேள் எப்படி நெருக்கமோ  அதேபோல, திரு.சரத்குமார் அவர்களுடைய தந்தையும், நாங்களும் மிக நெருங்கிய நண்பர்கள்.

வருத்தத்திற்குரியது!

அப்படிப்பட்ட ஓர் உறவுக் குடும்பம், நட்புறவுக் குடும்பத்தில் இப்படி ஓர் இழப்பு ஏற்பட்டது வருத்தத்திற்குரியது; என்றாலும், இயற்கையை நினைத்து ஆறுதல் அடையவேண்டும். – இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *