பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன ‘சிறந்த ஆசிரியர்’ விருது

வல்லம், செப்.22- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில், 13.09.2025 அன்று, கல்வித்துறையில் சிறப்பாகப் பங்களித்து, மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஆசிரியர்களை, அந்நிறுவனத்தில் பயிலும், முதலாம் ஆண்டு மாணவர்கள் மூலம் தேர்வு செய்து  விருது வழங்கும் விழா கோலாகமாக நடைபெற்றது.

இந்த விழாவில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர் ஏ.ஆர்.திலகவதி அவர்களுக்கு “மாற்றத்திற்கு விதையிட்ட  சிறந்த ஆசிரியர்” என்ற பெருமைமிகு விருது வழங்கப்பட்டது.

கல்வியின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் இந்த விருது, திலகவதி அவர்களின் அர்ப்பணிப்பு, மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாது, சமுதாய முன்னேற்றத்துக்கும் அவரது  பெரும் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டதற்குப் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *