கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.9.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

தி இந்து:

* ஒன்றிய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் கல்வி நிதி” – ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கறார். மும்மொழி கற்பதில் என்ன பிரச்சனை? தமிழ்நாடு அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்க கூடாது என்றும் ஆணவப் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகியவை பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான தங்கள் முடிவுகளை அறிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி மோடி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. கடந்த 20 மாதங்களாக பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் கொள்கையை “வெட்கக்கேடானது மற்றும் தார்மீக கோழைத்தனமானது” என்று விமர்சனம்.

* மாணவர்களிடம் ஜாதி, பாலின பாரபட்சம் வேரூன்ற ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது: முதலமைச்சர் ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஜி.எஸ்.டி. குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி, மோசமடைந்து வரும் இந்திய-அமெரிக்க உறவுகள், எச்1பி. விசா  வைத்திருப்பவர்களின் கவலைகள் அல்லது வரி தொடர்பான வாழ்வாதார அபாயங்களை நிவர்த்தி செய்வாரா என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *