ஜப்பானில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஜப்பான் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட ”பெரியார் வாழ்க்கை வரலாறு ” நூல் அளிப்பு

0 Min Read

அரசு, தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் ஜப்பான் சென்றுள்ள நிலையில், ஜப்பான் வாழ் தமிழர்கள் வெகு சிறப்பான வரவேற்பை முதலமைச்சருக்கு வழங்கியுள்ளனர்.

இந்த வரவேற்புக் குழுவின் முக்கிய அங்கமாக திகழ்பவர் தோழர் இரா. செந்தில்குமார் அவர்கள்.

‘‘பெரியார் வாழ்க்கை வரலாறு”, ‘‘வைக்கம் போராட்டம்” ஆகிய இரண்டு நூல்களையும் ஜப்பான் மொழியில் மொழி பெயர்த்தவர்கள் இரா.செந்தில்குமார் மற்றும் ச.கமலக் கண்ணன் ஆவர். ஆசிரியர் கி.வீரமணி முயற்சியால் உருவாகி வெளி யிடப்பட்ட நூல்கள் இவை.

இந்நிலையில் ஜப்பானில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த தோழர் இரா.செந்தில்குமார், ஜப்பான் மொழியில் உருவான ‘‘பெரியார் வாழ்க்கை வரலாறு” நூலைக் கொடுத்து மகிழ்ந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *