காசா போர் நிறுத்த தீர்மானம் மீண்டும் முறியடிப்பு 6ஆவது முறையாக ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்திய அமெரிக்கா உலக நாடுகள் கடும் கண்டனம்

நியூயார்க், செப்.21 அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காசா போர் நிறுத்தத் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் தடுத்து நிறுத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் கடந்த 2023 அக்டோபர் முதல் தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். அங்கு பஞ்சம் நிலவுவதாக அய்.நா. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக அய்.நா.வின் பன்னாட்டு விசாரணைக் குழு சில நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தது.

இந்தச் சூழலில், காசாவில் உடனடியாக நிரந்தரப் போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அமெரிக்கா தனது ‘வீட்டோ’ எனப்படும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தத் தீர்மானத்தை ஆறாவது முறையாகத் தடுத்து நிறுத்தியுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பு நாடுகள் இணைந்து கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தில், நிபந்தனையற்ற போர் நிறுத்தம், ஹமாஸ் பிடியில் உள்ள அனைத்துப் பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்தல், காசாவிற்குள் நுழையும் மனிதாபிமான உதவிகளுக்கான தடைகளை நீக்குதல் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கவுன்சிலில் உள்ள 15 உறுப்பு நாடுகளில், அமெரிக்காவைத் தவிர மற்ற 14 நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால், இந்தத் தீர்மானம் ஹமாஸ் அமைப்பைக் கண்டிக்கத் தவறிவிட்டதாகவும், இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறி அமெரிக்கா இதனை நிராகரித்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு பாலஸ்தீனம், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் இந்த முடிவை இஸ்ரேல் வரவேற்றுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *