பாராட்டத்தக்கது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த மீனவரின் உடல் உறுப்புகள் கொடை

தண்டையார்பேட்டை, செப்.21–  திருவள்ளூர் அருகே புலிகாட், சின்னம்மன் கோயில் தெரு, அரங்கன்குப்பத்தை சேர்ந்த மீன் பிடித்தொழில் செய்து வந்தவர் சந்தோஷ் (40). இவர், தனது மனைவி சாமந்தி, 2 மகள், ஒரு மகன் மற்றும் தாயுடன் வசித்து வந்தார். கடந்த 11ஆம் தேதி எண்ணூரில் வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார் சந்தோஷ். அனல் மின்நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சந்தோஷ் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 18ஆம் தேதி சந்தோஷுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம், அவரது குடும்பத்தினரிடம் பேசி, சந்தோஷின் உடல் உறுப்புகளை கொடை செய்யம்படி தெரிவித்தனர்.

அதற்கு அவரது குடும்பத்தினர் சம்மதம் அளித்தனர். இதையடுத்து, மருத்துவர் அரவிந்த் தலைமையில் சந்தோஷிடம் இருந்து 2 சிறுநீரகங்கள், கல்லீரல், இதய வால்வு, தோல் ஆகிய 5 உடல் உறுப்புகள் கொடையாக பெறப்பட்டன. இவை, அரசு விதிமுறை ப்படி பதிவு செய்து காத்திருக்கும் அரசு மருத்துவமனையை சேர்ந்த நபர்களுக்கு வழங்கப்படும் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சந்தோஷின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *