அட அய்யப்பா, நீ பொய்யப்பா! அய்யப்பன் சிலை கவசத்தில் நான்கு கிலோ தங்கம் மாயமாம்!

திருவனந்தபுரம், செப்.21 சபரிமலை அய்யப்பன் கோயிலில் சிலைக்கு தங்கத் தகடு பதிக்க வைத்திருந்த 4 கிலோ தங்கம் காணா மல்போனது பற்றி விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை கோவிலில் துவார பாலக சிலையின் மேல்பகுதியில் உள்ள மேற் கூரையில் தங்க முலாம் பூசப்பட்ட மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில் தற்போது கேரள உயர்நீதிமன்றம் அது தொடர்பான மனுவை விசாரித்து உத்தரவு பிறப் பித்துள்ளது.

3 வார காலத்திற்குள் தேவசம் விஜிலென்ஸ் அதிகாரி என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன என்பன தொடர்பான விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை அதிகார பூர்வமாக பிறப்பித்துள்ளது. மேற்கூரை அமைக்கும் பணியில் 4 கிலோ அளவிற்கு தங்கமானது கையாடல் செய்யப் பட்டுள்ளது என்ற புகாரின் அடிப்படையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவை கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *