குறிச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்

1 Min Read

அரசியல்


குறிச்சி,மே27-
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு- சேரன்மாதேவி குருகுல போராட்டம் நூற்றாண்டு- டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் கடந்த 20.5.2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு குறிச்சி வீட்டு வசதி வாரியம், காமராஜர் நகரில் தி.க ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

தெற்கு பகுதி செயலாளர் தெ. கும ரேசன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் தி.க. செந்தில்நாதன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், ஆட்டோ சு.ராஜு இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி நா.பிரபாகரன் தொடக்க உரையாற்றினார்.  தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். தி.மு.க. தெற்கு பகுதி செயலாளர் இரா.கார்த்தி கேயன், தி.மு.க. வடக்கு பகுதி செயலாளர்  எஸ்.ஏ. காதர், தி.மு.க. தெற்கு மண்டல தலைவர் இர.தனலட்சுமி, திமுக 97ஆவது வட்ட செயலாளர் கா.மகாலிங்கம், மாவட்ட அமைப் பாளர் மு.தமிழ்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்தி.க.காளி முத்து, ப.க. மாவட்ட செயலாளர் அக்ரி, நாகராஜ், பரமசிவம் சி.பி.அய்., வான வில் கனகராஜ், திமுக, வே.தமிழ்முரசு, ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக மாவட்ட இளைஞரணி தலைவர் ரா.சி.பிரபாகரன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *