தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கட்டுரைப் போட்டி – ஓவியப் போட்டி

1 Min Read

திருப்பத்தூர், செப். 20- தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட கழக அலுவலகத்தில் பெரியார் பற்றிய கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி 13.09.2025 காலை 9.30மணியளவில்  நடைபெற்றது.

இந்த போட்டித் தேர்வை மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தொடங்கி வைத்தார்.  இந் நிகழ்வு மாவட்டச் செயலாளர் பெ. கலைவாணன் ஏற்பாட்டிலும், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் கோ.திருப்பதி மேற்பார்வையிலும் நடைபெற்றது.

இந்த போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி என்று தனித்தனியாக முதல் பரிசாக ரூ. 2000 ,இரண்டாம் பரிசு ரூ1500, மூன்றாம் பரிசு ரூ.1000 வழங்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் 150 மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன்  பங்கேற்று சிறப்பித்தனர்.

இந் நிகழ்வை அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர்) தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்) எம். ஞான.பிரகாசம் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்) எம்.என்.அன்பழகன் (விடுதலை வாசகர் வட்ட அமைப் பாளர்) வெ.அன்பு (மாவட்ட தலைவர் ப. க), பெ.ரா. கனகராஜ் (கந்திலி ஒன்றிய தலைவர்) இராஜேந்திரன் (அமைப்பாளர் சோலையார்பேட்டை), இரா. நாகராசன் (கந்திலி ஒன்றிய செயலாளர்) கா. மோகன், பன்னீர், இரா. கற்பகவள்ளி (மாவட்ட தலைவர் மகளிரணி) குமரவேல் (மாவட்டபகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர்) க. முருகன் (தொழிலாளரணி) க. இனியவன், க. உதயவன் (மாணவர் கழகம்) இசைபிரியன் (மாவட்ட இளைஞரணி) ஆகியோர் பங்கேற்று மாணவர்களின் தேர்வை கண்காணித்தனர். காலை முதல் மாலை வரை போட்டித் தேர்வு நடைபெற்றது. போட்டியில் பங்கேற்று வெற்றிபெறுபவர்களுக்கு 27.09.25 அன்று மாலை பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *