மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,000 வழங்கும் பணி தொடங்கியது

1 Min Read

  சென்னை, மே 27 தமிழ்நாட்டில் 14 கடலோர மாவட்டங் களை சேர்ந்த 1.79 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை வழங்கும் பணி தொடங்கியது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.89.50 கோடி வழங்கி உத்தர விட்டுள்ளது.  இதுகுறித்து, தமிழக அரசு நேற்று (26.5.2023) வெளியிட்டுள்ள அறிக்கை: கடல் மீன்வளத்தை பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைகாலத்தின்போது மீன்பிடி விசைப்படகுகள், இழு வலை படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவார்கள்.

இந்த மீனவர்கள் தங்களது குடும்பத்தை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000 வீதம் மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்கப்படுகிறது. நடப் பாண்டிற்கான (2023) மீன்பிடி தடைகாலத்தில் தமிழ்நாட்டில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.79 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை ரூ.5000 வீதம் வழங்கிடும் பொருட்டு ரூ.89.50 கோடி அரசு நிதி ஒப்பளிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *