சீரங்கம் – தந்தை பெரியார் சிலைபற்றிய வன்முறைப் பேச்சு காவல்துறையில் திருச்சி மாவட்டக் கழகம் புகார்!

1 Min Read

பிஜேபி அண்ணாமலை திடீர் பல்டி! 

சீரங்கத்தில் 2006இல் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையையும், தந்தை பெரியாரின் கருத்துகள் அடங்கிய பீடத்தையும் (பலகை என்று ‘சாமர்த்தியமாக’ சொல்லுகிறார்) அப்புறப்படுத்துவோம் – அகற்றுவோம் என்று சட்டத்திற்குப் புறம்பாகவும், சட்ட ம்ஒழுங்குப் பிரச்சினை  ஏற்படும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் தமிழ்நாடு பிஜேபி  தலைவர் அண்ணாமலை  பேசி இருக்கிறார். இதுகுறித்து திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று (9.11.2023) திடீரென்று தமிழ்நாடு பிஜேபி தலைவர் கே. அண்ணாமலை திடீர் பல்டி அடித்துள்ளார். நாங்கள் பெரியாருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்போம் என்று பேசி இருக்கிறார். திரு. எல். முருகன் தமிழ்நாடு பிஜேபி தலைவராக வந்தபோது பெரியார்பற்றி தவறாக விமர்சிக்க வேண்டாம் என்று கூறியதையும் நினைவூட்டுகிறோம். அண்ணாமலையோ வாயைக் கொடுத்து சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம் 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *