தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் சமூக நீதி சமத்துவத்தை போற்றும் தலைவர்களின் வாழ்த்துகள்

2 Min Read

பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். ஜாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது. பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.

– கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழில் வெளியிட்ட வாழ்த்து

“நமது இலக்கிய மறுமலர்ச்சி குறித்த சிந்தனைகள் எப்போதும் மூடநம்பிக்கை, இழிவு, அநாகரிகம் மற்றும் அறியாமை ஆகியவற்றை அகற்றுவதைச் சுற்றியே இருக்க வேண்டும்.

ஞாயிறு மலர், தந்தை பெரியார், வாழ்த்து

பெரியார் பிறந்தநாளில், சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் வாழ்ந்த மாபெரும் சமூக சீர்திருத்தவாதியும், சமூக நீதியின் பாதுகாவலருமான தந்தை பெரியார் அவர்களுக்கு எங்கள் நினைவேந்தல்.

–  மல்லிகார்ஜுன் கார்கே

ஞாயிறு மலர், தந்தை பெரியார், வாழ்த்து

அவரது பிறந்தநாளில், ஈ.வெ. ராமசாமி ‘பெரியார்’ (1879-1973) – திராவிட இயக்கத்தின் தந்தை, ஜாதிய ஒடுக்குமுறை மற்றும் ஆணாதிக்கத்திற்கு எதிரான ஒரு
அச்சமற்ற போராளி – அவரை நாம் போற்றுகிறோம். சமத்துவம், பகுத்தறிவு மற்றும் சமூக நீதிக்கான அவரது தொலைநோக்கு, பல தலைமுறைகள் மற்றும் பிராந்தியங்களில் கண்ணியம் மற்றும் விடுதலைக்கான இயக்கங்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

ஞாயிறு மலர், தந்தை பெரியார், வாழ்த்து

 – சித்தராமைய்யா வெளியிட்ட வாழ்த்தின் தமிழாக்கம்

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அந்த மாபெரும் சமூக சீர்திருத்தவாதிக்கும், தொலைநோக்குத் தலைவருக்கும் எமது பணிவான நினைவேந்தல். ஜாதி அடிப்படையிலான பாகுபாடு, சமத்துவமின்மை மற்றும் சமூக அநீதிக்கு எதிராகப் பெரியார் மேற்கொண்ட அயராத போராட்டம், அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவ சமுதாயத்திற்காகப் பணியாற்ற நமக்கு உத்வேகம் அளிக்கிறது. பகுத்தறிவு, சுயமரியாதை, மற்றும் சமூக சமத்துவம் குறித்த அவரது ஆதரவு என்றும் வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது.

ஞாயிறு மலர், தந்தை பெரியார், வாழ்த்து

அவரது போதனைகளை நாம் நினைவில் கொள்வோம், மேலும் ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டைத் தொடர்வோம்.

– ஹேமந்த் சோரன்

பகுத்தறிவு, மக்களின் உரிமைகள், சுயமரியாதை, அறிவியல் மனப்பான்மை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் மேம்பாட்டிற்காகக் குரல் கொடுத்த, சமத்துவம் மற்றும் சுதந்திரத்தின் சிறந்த ஆதரவாளர், மாபெரும் புரட்சியாளர், வாழ்நாள் முழுவதும் மத மூடநம்பிக்கை, பாசாங்கு, சடங்குகள், சாதி வெறி, வர்ணாசிரம முறை மற்றும் பெண்கள் மீதான சமூக ஒடுக்குமுறையை கடுமையாக எதிர்த்த மாபெரும் சிந்தனையாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான மதிப்பிற்குரிய ஈ.வெ. ராமசாமி பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு என் கோடான கோடி வணக்கங்கள்.

 – தேஜஸ்வி ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்

ஞாயிறு மலர், தந்தை பெரியார், வாழ்த்து

-பீகாரிலிருந்து பாரதீய சூத்திர சங் அமைப்பின் தலைவர் மந்தீஸ்குமாரின் வாழ்த்து.

ஞாயிறு மலர், தந்தை பெரியார், வாழ்த்து

-காங்கிரஸ் பேரியக்கத்தின் வாழ்த்து.

ஞாயிறு மலர், தந்தை பெரியார், வாழ்த்து

ஆந்திரா விடுதலைச் சிறுத்தைகள்
கட்சியின் வாழ்த்து.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *