விண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்ப திட்டம் : இஸ்ரோ தலைவர் தகவல்

1 Min Read

கோவை, செப்.19 கோவை நேரு கல்வி குழுமத்தில் தேசிய கண்டுபிடிப்பாளர் மாநாடு நேற்று (18.9.2025) நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் கோவை வந்தார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இஸ்ரோ ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த திட்டமானது 2018-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் ஆளில்லாத ராக்கெட் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதில் ஏ.அய். தொழில்நுட்பத்துடன் கூடிய வயோமித்ரா என்ற மனித வடிவ ரோபோவை அனுப்ப உள்ளோம். இது முடிந்தவுடன் 2 ஆளில்லா ராக்கெட்களை அனுப்ப உள்ளோம்.

2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளோம். ககன்யான் திட்டத்தில் 85 சதவீதம் சோதனைகள் நிறைவு பெற்று உள்ளது. மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ராக்கெட்டில் விபத்து நடந்தால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதையும் ஆய்வு செய்து வருகிறோம்.

இஸ்ரோ மட்டுமல்லாமல் ஏரோ, நேவி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்கிறார்கள். உலகத்தில் 9 இடங்களில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். நிலவில் இருக்கக்கூடிய கேமராவில் சிறந்த கேமரா நமது நாட்டின் கேமரா தான். செவ்வாய் கிரகத்துக்கு செயற்கை கோளை அனுப்புவதிலும் வெற்றி அடைந்த முதல் நாடு இந்தியாதான். ராக்கெட் என்ஜினிலும் சாதனைகளை படைத்துள்ளோம். நமது நாட்டில் மாணவர்கள் அனைவரும் விண்வெளி சார்ந்த விஷயங்களில் ஆர்வமாக உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் விண்வெளித்துறையிலும் வந்துவிட்டது. வயோமித்ரா என்பதும் ஏ.அய். தொழில்நுட்பம் தான். சந்திரயான்-4 திட்டத்தில் நிலவில் மாதிரிகளை எடுத்து வருவதிலும் செயற்கை நுண்ணறிவு ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *