தந்தை பெரியார் படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை : சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

0 Min Read

தமிழ்நாடு

தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலைத்திற்கு அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நேரு, இரகுபதி, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், எம்.பி.க்கள் கனிமொழி, துரை. வைகோ, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *