எங்களுக்குத் தூக்கம் வருவதை தெரிந்துகொண்ட பிறகே அவர் தூங்க கிளம்புவார்

1 Min Read

ஒவ்வொரு நாளும் இரவு பெரியார் வீட்டில் உணவு முடிந்ததும், பெரியார் தன் வீட்டு மாடியில் காற்றோட்டமான பகுதியில் எங்களை உட்கார வைத்துக் கொண்டு சமுதாயச் சீர்திருத்தங்கள், அரசியல் மாற்றங்கள் இவைகளைப் பற்றியெல்லாம் நீண்ட நேரம் விளக்கங்கள் அளிப்பார். எங்களுக்குத் தூக்கம் வருவதைத் தெரிந்து கொண்ட பிறகே அவர் தூங்கக் கிளம்புவார். பெரியாரிடம் நான் கற்றுக் கொண்டது எவ்வளவோ! அவற்றில் பின்பற்றுவதும் எவ்வளவோ! அதிலே ஒன்றுதான் தந்தை பெரியார் எவ்வாறு இரவில் எங்களையெல்லாம் அழைத்து அன்றாட அரசியல் நிலைகளைப் பற்றி கலந்துரையாடுவாரோ, அதுபோலவே தான் நானும் இன்றளவும், இரவு நேரங்களில் கழக முன்னணியினரோடு வீட்டிலோ, அறிவாலயத்திலோ உரையாடுவதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன் என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்த இரவு நேர கலந்துரையாடல்கள் எந்த அளவிற்கு அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கவும், ஆக்க ரீதியான பணிகளை ஆற்றிடவும் உதவியிருக்கின்றன என்பதை தமிழகம் நன்கறியும்.

 – முத்தமிழறிஞர் கலைஞர்

நூல்: பெரியார் களஞ்சியம்
‘குடிஅரசு’ அணிந்துரை

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *