சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு போதைப் பொருள் விற்பனையா? கைப்பேசி மூலம் உடனே புகார் அளிக்கலாம்

2 Min Read

அரசியல்

சென்னை, மே 28 சென்னையில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் அலைபேசி மூலம் தகவல் அளிக்கலாம் என காவல் துறை அறிவித்துள்ளது. 

சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கை: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம், போலி மதுபானம், கஞ்சா மற்றும் மெத்தனால் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற் பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சென்னை காவல் ஆணையாளர் உத்தர வின் பேரில் சென்னை காவல் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் கீழ்கண்ட அலைபேசி எண் களை தொடர்பு கொண்டும், வாட்ஸ் அப் மூலமாகவும் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் ஆங்காங்கே காவல்துறை சார்பாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் கொடுக்கும் பொதுமக்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் விபரங்கள். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வடக்கு மண்டலம் (பூக்கடை, வண்ணாரப் பேட்டை, புளியந்தோப்பு காவல் மாவட்டங்கள்) அலைபேசி எண்-80728 64204. மது விலக்கு அமலாக்கப்பிரிவு மேற்கு மண் டலம் (அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்கள்) அலைபேசி எண்- 90423-80581. மது விலக்கு அமலாக் கப்பிரிவு தெற்கு மண் டலம் (அடையார், புனித தோமையர் மலை தி.நகர்காவல் மாவட்டங்கள்) அலைபேசி எண்- 90424-75097.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கிழக்கு மண்டலம் (திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், மைலாப்பூர் காவல் மாவட் டங்கள்) அலைபேசி எண்-63823-18480. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையினர் தீவிர மாக கண்காணித்து, கள்ளச்சாராயம், போலி மதுபானம், கஞ்சா மற்றும் மெத்தனால் உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்ய, வாகனத் தணிக்கைகள், தீவிர ரோந்துப் பணிகள் மற்றும் சிறப்பு அதிரடித் தணிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடு வர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *