ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியில் உணவுத் திருவிழா

1 Min Read

ஜெயங்கொண்டம், செப்.16- ஜெயங் கொண்டம்
பெரியார் பள்ளியில்   13.9.25 அன்று உணவு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்களின் ஆரோக்கியம், சத்தான உணவு பழக்கவழக்கம், பாரம்பரிய உணவுகளின் முக்கியம் ஆகியவற்றை எடுத்துரைப்பதே இவ்விழாவின் நோக்கமாகும்.

இவ்விழாவினை  பள்ளியின் முதல்வர் துவக்கி வைத்து உடல் நலம் காக்கும் உணவு ஆகவே மாணவர்கள் சத்தான ஆரோக்கியமான உணவுகளையே உண்ண வேண்டும் என எடுத்துரைத்தார் விழாவில் மாணவர்கள் குழுவாகப் பிரிந்து பாரம்பரிய உணவுகள், ஊட்டச்சத்து உணவுகள்,காய்கறிகள், பழச்சாறு, சிற்றுண்டிகள் எனப் பல வகை உணவுகளை  காட்சிப்படுத்தியிருந்தனர்.

இவ்விழா மாண வர்களுக்கு ஆரோக்கிய உணவின் அவசியத்தை புரிய வைத்ததோடு பாரம்பரிய உணவுகளை அறிந்து மதிக்கும் மனப்பாங்கையும் பகிர்ந்து உண்ணும் பண்பையும் வளர்த்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *