சென்னை செப்.15- முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் முன்னிலையில் உள்ள அய்அய்எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வில் (Common Admission Test-CAT) தேர்ச்சி பெறவேண்டும். இந்த ஆண்டுக்கான ‘கேட்’ தேர்வு நாடு முழுவதும் 170 மய்யங்களில் நவம்பர் 30ஆம் தேதி கணினி வழியில் நடைபெற உள்ளது. இத்தேர்வை கோழிக்கோடு அய்அய்எம் நடத்துகிறது. காலை 8.30-10.30, மதியம் 12.30-2.30, மாலை 4.30-6.30 என மொத்தம் 3 அமர்வுகளாக தேர்வு நடைபெறும்.
இதற்கான இணை யதள விண்ணப் பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 1இல் தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாணவர்கள் நலன்கருதி விண்ணப்பிக்கும் அவகாசம் செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள பட்டதாரிகள் https://iimcat.ac.in எனும் வலைதளத்தில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக எஸ்சி, எஸ்டி பிரி வினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.1,300, மற்ற தேர்வர்கள் ரூ.2,600 செலுத்த வேண்டும். தகுதியானவர்களுக்கு (ஹால் டிக்கெட்) நவம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.தேர்வு முடிவுகள் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.