வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கவுகாத்தி, செப்.15- மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அசாமில் 2 சிறுமிகள் காயமடைந்ததுடன், பல வீடுகளும் சேதமடைந்தன.

4 முறை நில நடுக்கம்

வடகிழக்கு மாநிலங் களில் ஒன்றான அசாமை மையமாக கொண்டு நேற்று மாலையில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. மாலை 4.41 மணிக்கு ஏற்பட்ட முதல் நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது.

அதைத்தொடர்ந்து 6.11 மணி வரை மேலும் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இவற்றின் அளவு முறையே 3.1, 2.9, 2.7 புள்ளிகளாக இருந்தன. இதில் 3ஆவது நிலநடுக்கத்தின் மய்யப்பகுதி அசாமின் சோனிட்பூராக இருந்தது. மீதமுள்ள 3 அதிர்வுகளும் உடால்குரி மாவட்டத்தை மய்யமாக கொண்டு நிகழ்ந்தது.

சுமார் 1 ½  மணி நேரத் தில் 4 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அசாமில் கணிசமான சேதம் நிகழ்ந்தது. மாநிலத்தின் பல பகுதிகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டன.

மேலும் தங்கும் விடுதி ஒன்றின் கூரையும் சரிந்தது. இதில் அங்கே தங்கியிருந்த 2 சிறுமிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

வீடுகள் குலுங்கின

அசாமை மய்யமாக கொண்டு ஏற்பட்டாலும் இந்த நிலநடுக்கங்களின் அதிர்வுகள் ஓட்டு மொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் உண ரப்பட்டன. குறிப்பாக அருணாசலப் பிரதேச தலைநகர் இடாநகரில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதைப்போல மணிப்பூரி லும் இந்த நிலநடுக்கங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அசாமின் அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் சில நிமிடங்களுக்கு அதிர்வுகள் நீடித்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதை காண முடிந்தது. எனினும் இந்த மாநிலங்களில் உயிர்ச்சேதம் மற்றும் உடைமை சேதம் பற்றிய தகவல் எதுவும் இல்லை.

பிரதமர் மோடி கேட்டறிந்தார்

பிரதமர் மோடி 2 நாள் வட கிழக்கு மாநில பயணத்தை முடித்து மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவை நேற்று அடைந்தார்.

அங்கிருந்தவாறே அசாம் முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு நிலநடுக்க சேதங்களை கேட்டறிந்தார். சேதங் களை சீரமைக்க அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *