இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!

1 Min Read

சென்னை, செப்.14 சென்னை சூளை மேட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று (13.9.2025) நடைபெற்ற அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில், தோழர் மு.வீரபாண்டியன் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், 2018 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூக நீதி போராட்டங்களில் முக்கியப் பங்காற்றியவர்.

முன்னதாக, 2015 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்ற இரா.முத்தரசன், தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள தோழர் மு.வீரபாண்டியன் அவர்களுக்கு நேற்று மாலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.உரியவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *