தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு அளிக்க சென்னை மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கீடு

1 Min Read

சென்னை, செப்.14– சென்னை மாநக​ராட்​சி​யில் தூய்மை பணி​யாளர்​களுக்கு 3 வேளை​யும் இலவச உணவு வழங்​கும் திட்​டத்​துக்​காக ரூ.150 கோடியை ஒதுக்​கீடு செய்​து,மாநக​ராட்சி ஒப்பந்தம்் கோரி​யுள்​ளது.

சென்னை மாநக​ராட்​சி​யில் இராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலத்​துக்​குட்​பட்ட தூய்மை பணியை தனி​யாரிடம் ஒப்​படைத்​தது மாநக​ராட்​சி. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் அந்த இரு மண்​டலங்​களை சேர்ந்த தூய்மைப்பணி​யாளர்​கள் தொடர்ந்து 13 நாட்​களாக மாநக​ராட்சி ரிப்​பன் மாளிகை முன்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

பின்​னர் நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் அவர்​கள் நள்​ளிர​வில் கைது செய்​யப்​பட்​டு, அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர்.  இதற்கு பல்​வேறு கட்​சிகளும், அமைப்​பு​களும் எதிர்ப்பு தெரி​வித்த நிலை​யில், முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் ஆக.14ஆம் தேதி நடந்த அமைச்​சரவை கூட்​டத்​தில் தூய்மை பணி​யாளர்​கள் நலனுக்​காக 6 சிறப்பு திட்​டங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. அதன்​படி தூய்மைப் பணி​யாளர்கள் பணி​யின் போது உயி​ரிழந்​தால் அவர்​களது குடும்​பத்​துக்கு ரூ.10 லட்​சம் வழங்​கப்​படும், நகர்ப்​புற தூய்மைப் பணி​யாளர்​களுக்கு காலை உணவு, அந்​தந்த நகராட்​சிகளின் மூலம் இலவச​மாக வழங்​கப்​படும் உள்​ளிட்ட திட்​டங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

அந்​தவகை​யில் சென்னை மாநகரில் தினசரி பணி​யில் இருக்​கும் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தூய்மைப் பணி​யாளர்​களுக்கு காலை, மதி​யம், இரவு என 3 வேளை​யும் உணவு வழங்​கும் வகை​யில் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்பட உள்​ளது.

அதன்​படி இந்த திட்​டத்​துக்​காக ஆண்​டுக்கு ரூ.50 கோடி வீதம் 3 ஆண்​டு​களுக்கு ரூ.150 கோடியை ஒதுக்​கீடு செய்​து, இந்த திட்​டத்தை செயல்​படுத்​து​வதற்​காக உணவு தயாரித்து வழங்​கும் நிறு​வனங்​களை தேர்வு செய்ய, சென்னை மாநக​ராட்சி ஒப்பந்தம் கோரி​யுள்​ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *