திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, செப்.14–    திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்   04.09.2025 அன்று  காலை 9.30 மணியளவில் மொழி வாழ்த்துடன் தொடங்கப்பட்ட ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியை   க. பாக்கியலெட்சுமி தலைமை ஏற்க, பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் முன்னி லையில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

12ஆம் வகுப்பு ஆ பிரிவைச் சேர்ந்த மாணவத்தலைவி மு. ஷிபானா பாத்திமா விழாவில் குழுமியிருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

11ஆம் வகுப்பு மாணவி அ. சனா ஹமிதா தனது உரையில், ‘மரத்தின் வேர்போல இருப்பவர் தலைமையாசிரியை, அதில் கிளைகளாக இருப்பவர்கள் ஆசிரியர்கள், அதில் இலைகளாக இருப்பவர்கள் நாங்கள் என உரையைத் தொடங்கி, ஏணி படிகளாய் நின்று எங்களின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறுதுணை யாக இருப்பவர்கள் எம் பள்ளியின் தலைமை யாசிரியர் மற்றும் ஆசிரி யப்பெருமக்கள் எனக்கூறி பள்ளியின் அனைத்து மாணவிகளின் சார்பாக சிறப்பானதொரு உரை நிகழ்த்தி, வாழ்த்த வயதில்லை வணங்கி
மகிழ்கிறோம்’ என தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.

11ஆம் வகுப்பு மாணவி காருண்யா பறக்கும் பட்டமில்ல –  நம் ஆசிரியர்கள் நம்மை உயர உயர பறக்க வைக்கும் நூல் ஆகிறார்கள் என்ற நீண்டதொரு கவிதையை வடித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பின்பு ஆசிரியர்களை மகிழ்விக்கும் விதமாக மாணவியர்கள் பல கலை நிகழ்ச்சியை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக குழு விளையாட்டு, பலூன் ஊதும் போட்டி நடைபெற்றது. ஆசிரியர்கள் மிக ஆவலுடன் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதக்கம் வழங்கி வாழ்த்து க்களை தெரிவித்து, அனைத்து ஆசிரி யர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

இறுதியாக 11ஆம் வகுப்பு மாணவி மீனாட்சி நன்றி நவில் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சி முழுவதையும் பள்ளியின் மாணவியர் தலைவி  எஸ்.ஷிபானா பாத்திமா மற்றும் துணைத்தலைவி 8. ஷிபா தொகுத்து வழங்கினார்கள்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *