வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கபடிப் போட்டி

2 Min Read

திருச்சி, செப்.14– தஞ்சாவூர் மாவட்டம் உள்ளூர் விளையாட்டு கபடி போட்டியில் 24 ஊர்களில் இருந்து 24 குழுக்கள் பங்கு பெற்றன. 6.9.2025 அன்று வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் குழு பங்கு பெற்று மூன்றாவது பரிசு பெற்று கோப்பையை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தது.

வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த பள்ளி சிலம்பம் பயிற்சியாளர் பிரியதர்ஷன், உடற்கல்வி ஆசிரியை நித்யா ஆகிய இருவரையும் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர். 9.9.2025 அன்று காலை வணக்கக் கூட்டத்தில் பரிசுப் பெற கடினமாக உழைத்த சிலம்பம் பயிற்சியாளர் பிரியதர்ஷன், உடற்கல்வி ஆசிரியை  நித்யா ஆகியோர் முன்னிலையில் முதல்வர்  பரிசுப் பெற்ற மாணவர்களுக்குக் கோப்பையை  வழங்கி சிறப்பித்தார்

வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி

மண்டல அளவிலான முதலமைச்சர்

கோப்பை ஜூடோ போட்டியில் பரிசு

தமிழ்நாடு

திருச்சி, செப்.14– 8.9.2025 அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சிராப்பள்ளி மண்டல அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2025 திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் கோப்பை ஜூடோ போட்டியில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு யோகா சிறீ ஒன்பதாம் வகுப்பு ஆர்த்தி ஏழாம் வகுப்பு கவுஷிக் ஆகிய மூவரும் கலந்து கொண்டனர். போட்டியில் ஆர்த்தி மற்றும் யோகசிறீ இரண்டாம் பரிசு பெற்று மாநில அளவில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளன. பரிசு பெறுவதற்கு கடினமாக உழைத்த பள்ளி சிலம்பம் ஆசிரியர் பிரியதர்ஷன், உடற்கல்வி ஆசிரியை நித்யாவையும் மனமுவந்து பாராட்டியவர்கள் பள்ளி தாளாளர் முதல்வர், ஆசிரியர் பெருமக்கள், அலு வலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள்.

9.9.2025 அன்று காலை வணக்கக் கூட்டத்தில் பரிசுப் பெற கடினமாக உழைத்த சிலம்பம் பயிற்சியாளர் பிரியதர்ஷன்,   உடற்கல்வி ஆசிரியை  நித்யா ஆகியோருக்கு, முதல்வர் அவர்களால் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

 

 

.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *