குழந்தை பெற்ற 17ஆவது நாளில் தேர்வு எழுதி சிவில் சர்வீஸ் தேர்வில் 45ஆவது ரேங்க் பெற்ற பெண்

1 Min Read

திருவனந்தபுரம், செப் 14 கேரளாவைச் சேர்ந்த மாளவிகா ஜி நாயர், அய்ஆர்எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தபோதிலும், இந்திய நிர்வாகப் பணியில் (அய்ஏஎஸ்) சேர வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க, கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட உடல்நல சவால்களையும் கடந்து, 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 45-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

2020 பேட்ச் அய்ஆர்எஸ் அதிகாரியான மாளவிகா, மீண்டும் 2024-ஆம் ஆண்டு UPSC தேர்வுக்குத் தயாரானபோது, கர்ப்பமாக இருந்தார். கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட பல்வேறு உடல்நல சவால்கள் அவரைப் பெரிதும் பாதித்தன. இருந்தும், அவர் தனது கனவை கைவிடவில்லை. செப்டம்பர் 3-ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், வெறும் 17 நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற UPSC முதன்மைத் தேர்வை அவர் எழுதினார்.

மாளவிகாவின் இந்த மன உறுதி, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவை, கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை ஒரு தடையாகக் கருதாமல், தனது கனவை அடைய ஒரு உந்துதலாக மாற்றிக்கொண்டதை உலகிற்கு உணர்த்துகிறது. இந்த வெற்றியை, சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் ஒரு உத்வேகமானதாக மாறியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *