வாகன ஓட்டிகளே.. அபராதத்தை செலுத்தினால் மட்டுமே இன்சூரன்ஸ் புதுப்பிக்கலாம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்ைன, செப்.13-  வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னை மாநகரக் காவல்துறை கொண்டு வந்துள்ளது. வாகனங்களுக்கான அபராத தொகையை செலுத்தாமல் ஆண் டுக் கணக்கில் பல ரும் இழுத்தடித்து வருவதால், காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி புதிய நடைமுறையை செயல்படுத்தி உள்ளது சென்னை மாநகர போக்கு வரத்து காவல்துறை.

தலைநகர் சென்னை யில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விதிமீறல் சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன.  அதி வேக மாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மீறுதல், ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராத தொகையை ஏராளமான வாகன ஓட்டிகள், ஆண்டுக்கணக்கில் செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.  இந்த அபராதத் தொகையை வசூலிக்க, ஒவ்வொரு போக்குவரத்து உதவி ஆணையர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ள, கால் சென்டர் ஊழியர்கள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனாலும், வாகன ஓட்டிகள் பலரும் அபராதத் தொகையை செலுத்த முன்வராததால் போக்குவரத்து விதிமீறலுக் காக விதிக்கப்பட்ட அபராத நிலுவை ரூ.300 கோடி வரை செலுத்தப்படாமல் உள்ளதால், நிலுவைத் தொகையை வசூல் செய் யும் பொருட்டு, காப்பீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து சென்னை மாநகரக் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  அதன்படி, இன்சூ ரன்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் பக்கத்தில், வாகன பதிவு எண்ணை உள்ளீடு செய்து இன்சூரன்ஸை புதுப்பிக்க வேண்டும். அப்படி புதுப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட வாக னத்திற்கு அபராத தொகை செலுத்தப்படாமல் இருந்தால், அதை உடனடியாக செலுத்தும்படி அறிவுறுத்தப்படும்.

நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே, வாகனத்திற்கான இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும்.

நேரடியாகச் சென் றாலும், ஆன்லைன் மூலம் புதுப்பிக்க முயன்றாலும், அபராதத் தொகையை செலுத்தினால்
மட்டுமே இனி இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும்
என்ற வகையில் நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *