துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை செப் 13 கடந்த நான்கு ஆண்டுகளில் 18.50 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது:

மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் இதுவரை 770 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். காலை உணவு திட்டத்தில் 22 லட்சம் குழந்தைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. புதுமை பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களால் 8 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதம் 1 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் பயனடைகின்றன. உங்களுடன் முதலமைச்சர் திட்டம் முகாமில் பெறப்பட்ட மனுக்களில், 40% மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை கோரி பெறப்பட்டுள்ளன. விடுபட்ட மற்றும் தகுதியான மகளிருக்கு உதவித்தொகை நிச்சயம் வழங்கப்படும். என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்:
ரஷ்யா திட்டவட்டம்

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறி வித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே அமை தியை நிலைநாட்ட, டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்த நிலையில், இப்போதைக்கு அந்த வாய்ப்பே கிடையாது என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் இப்போதைக்கு நிற்க வாய்ப்பில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *