அரியலூர் மாவட்டத்தில் குளிர் சாதனப் பேருந்து சேவை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரியலூர், செப், 13- அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் BS-V1  இரண்டு புதிய புறநகர் பேருந்துகள் மற்றும் ஒரு புதிய குளிர் சாதன பேருந்து சேவையையும்  தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளிட் டோர்களுக்கு அரசு பேருந்து சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி மண்டலம், ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் கிளை சார்பில் BS-V1  இரண்டு புதிய புறநகர பேருந்துகளையும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் புதிய குளிர் சாதன பேருந்து சேவையையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்   கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதன்படி குன்னம் கிளை புறநகர் பேருந்து எண்.TN 45 /N-4811  தஞ்சாவூரில் இருந்து அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் வழித்தடத்திலும்,  ஜெயங்கொண்டம் கிளை புறநகர் பேருந்து எண்.TN 45/N-4809  ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை கிளாம்பாக்கம் வழித்தடத்திலும்,  விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் புதிய குளிர் சாதன பேருந்து அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஜெயங்கொண்டம், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக மாதவரம் வரை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *