அயோக்கியத்தனம் எது?

1 Min Read

28.10.1944 – குடிஅரசிலி ருந்து….

நன்றாய் கொழுக்கட்டை போலும், மணலில் பிடுங்கிய கிழங்கு போலும் இருந்துகொண்டு, அய்யா, மூன்று நாளாக கஞ்சியே காணவில்லை; காலணா தருமம் கொடுங்கோ என்று கேட்பது அயோக்கியத்தனம்.

ஆனால், அது போலவே இருந்துகொண்டு யாதொரு விதமான பாடும் படாமல் தன் பெரியோர்கள் சம்பாதித்து வைத்துவிட்டுப் போனார்கள் என்றோ, பரம்பரை சொத்து பத்தியத்தில் கிடைத்தது என்றோ பெரும் செல்வத்தைவைத்துக் கொண்டு சுகபோகமாய் இருப்பதாக கருதிக் கொண்டு சோம்பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு இருப்பது அதைவிட அயோக்கியத்தனம். பிந்தியவன் பாடுபடாமல் ஏராளமான சொத்தை வைத்துக்கொண்டு அனுபவித்துக்கொண்டு இருக்கும் போது, முந்தியவன் பாடுபடாமல் பிச்சை கேட்பதில் தப்பு என்ன இருக்கிறது?

தொல்லை
எது?

பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையாகவும், மனதிற்குச் சங்கடமாகவும் இருக்கிறது. அதுபோல வேதான் பணக்காரன் (தனது தேவைக்கு மேல் வைத்திருப்பவன்) பணத்தை வைத்துக்கொண்டு கோவில், மடம்  கட்டிக்கொண்டு கும்பாபிஷேகம், உற்சவம், பிராமண சமார்த்தனை முதலிய செய்துகொண்டு இருப்பதும் பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் நாட்டுக்குக் கேடாகவும் இருக்கிறது.

கடவுள்

பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்; ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார்.  அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்திகனாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும்? ஆதலால் மக்களை எல் லாம் நாஸ்திகர்களாக ஆக்கி விட்டால் பணக்காரனும் தரித்திரனும் தானாகவே மறைந்து போவார்களா – மாட்டார்களா?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *