இந்தியாவில் மேலும் 403 பேருக்கு கரோனா பாதிப்பு – தொற்றுக்கு 5 பேர் பலி

1 Min Read

அரசியல்

புதுடில்லி, மே 29 – இந்தியாவில் தற்போது கரோனா தொற்று தினசரி பாதிப்பு 500க்குள் அடங்கி வருகிறது.

இந்தியாவில் தற் போது கரோனா தொற்று தினசரி பாதிப்பு 500-க்குள் அடங்கி வருகிறது. நேற்று முன்தினம் (27.5.2023) 425 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மேலும் 403 பேருக்கு கரோனா உறுதியானது. இதனால் இந்த தொற்று பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கரோனா பாதிப்பில் இருந்து 685 பேர் மீண்டனர். இதுவரை கரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 52 ஆயிரத்து 908 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 287 குறைந்தது. இதன் காரணமாக கரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று காலை 8 மணி நிலவரப்படி 4,972 ஆக இருந்தது.

கரோனா தொற்றினால் நேற்று முன்தினம் 3 பேர் பலியாகினர். நேற்று இந்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதில் கேரளாவில் விடுபட்ட கரோனா பலிகளில் 3-ம் அடங்கும். இந்த தொற்றில் இருந்து மீள முடியாமல் இந்தியாவில் இதுவரையில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 864 பேர் இறந்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *