இந்தியாவில் மேலும் 403 பேருக்கு கரோனா பாதிப்பு – தொற்றுக்கு 5 பேர் பலி

Viduthalai
1 Min Read

அரசியல்

புதுடில்லி, மே 29 – இந்தியாவில் தற்போது கரோனா தொற்று தினசரி பாதிப்பு 500க்குள் அடங்கி வருகிறது.

இந்தியாவில் தற் போது கரோனா தொற்று தினசரி பாதிப்பு 500-க்குள் அடங்கி வருகிறது. நேற்று முன்தினம் (27.5.2023) 425 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மேலும் 403 பேருக்கு கரோனா உறுதியானது. இதனால் இந்த தொற்று பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கரோனா பாதிப்பில் இருந்து 685 பேர் மீண்டனர். இதுவரை கரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 52 ஆயிரத்து 908 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 287 குறைந்தது. இதன் காரணமாக கரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று காலை 8 மணி நிலவரப்படி 4,972 ஆக இருந்தது.

கரோனா தொற்றினால் நேற்று முன்தினம் 3 பேர் பலியாகினர். நேற்று இந்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதில் கேரளாவில் விடுபட்ட கரோனா பலிகளில் 3-ம் அடங்கும். இந்த தொற்றில் இருந்து மீள முடியாமல் இந்தியாவில் இதுவரையில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 864 பேர் இறந்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *