சென்னை, செப்.12 திராவிட மாடல் ஆட்சியில் மகப்பேறு இறப்பு விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் வெகுவாக குறைந்து நாட்டிலேயே தமிழ்நாடு 3ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஒன்றிய அரசு வெளி யிட்டுள்ள மகப்பேறு இறப்பு விகிதம் தொடர்பான புள்ளி விவரங் களின்படி, தமிழ்நாட்டின் 2021-2023 காலகட்டத்தில் மகப்பேறு மரண விகிதம் ஒரு லட்சம் மகப்பேறுக்கு 35 ஆக குறைந்துள்ளது. 2021 கால கட்டத்தில் இந்த இறப்பு விகிதம் 38 ஆக இருந்தது. இந்திய அளவில் மகப் பேறு மரணம் ஒரு லட்சத்திற்கு 88 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் மகப் பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத் திற்கு கொண்டு வர மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு கவனம் செலுத்தி வரு கிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக் கான ஊட்டச்சத்து, பிரசவகாலம் வரை கர்ப்பிணிகளின் மருத்துவப் பரிசோதனைகளை தொடர்ந்து கண்காணித்தல், குழந்தை பரா மரிப்பு, தாய்ப்பாலின் முக்கியத்து வம், மலைக்கிராமங்களில் கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்துதல் உள்ளிட்ட சேவைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மகப் பேறு இறப்பு விகிதத்தை தமிழ் நாடு வெகுவாக குறைத்து நாட் டிலேயே 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
4 ஆண்டுகளில் மகப்பேறு இறப்பு விகிதம் வெகுவாக குறைவு நாட்டிலேயே தமிழ்நாடு 3ஆம் இடத்திற்கு முன்னேற்றம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books