சென்னை,மே30 – தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-2024ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை இந்த மாதத் தொடக்கத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டு இருந் தார்.
அதன்படி 164 அரசு கலை கல்லூரிகளில் உள்ள பி.காம், பி.ஏ., பி.பி.ஏ. உள்பட பல்வேறு பாடப்பிரிவுகள் இருக்கும் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் அறி வுறுத்தப்பட்டிருந்தனர்.
இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கு கடந்த 22ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 752 மாணவர்களும், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகளும், திருநங்கைகள் 78 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
விண்ணப்பித்தவர்கள் எந்தெந்த கல்லூரிகளுக்கு விண் ணப்பித்து இருந்தார்களோ அந் தக் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை கல்லூரி கல்வி இயக்ககம் கடந்த 25ஆம் தேதி வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து கலந் தாய்வு நேற்று (29.5.2023) தொடங் கியது. முதலில் மாற்றுத் திறனாளி கள், விளையாட்டு மாணவர்கள், மேனாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள், தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்கள் ஆகியோ ருக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு நடக்கிறது.
நேற்று தொடங்கிய இந்த சிறப்பு கலந்தாய்வு நாளை (29.5.2023) வரை நடைபெற உள்ளது. அதன் பின்னர் பொது கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட இருக் கிறது.
இதில் முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலும், 2ஆம் கட்ட கலந்தாய்வு வருகிற 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது.
கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர்கள் தங்களுடைய மதிப் பெண் அடிப்படையில் தகுதியான பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தங்களுடைய முறையான ஆவணங்களையும் கல்லூரி பேரா சிரியர்கள் நிர்வாகிகள் சரிபார்த்து, அதன் பின்னரே இடங்கள் ஒதுக் கீடு செய்யப்படுகின்றன.
கலந்தாய்வு வருகிற 20ஆம் தேதி நிறைவு பெற்றதும், முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் வருகிற 22ஆம் தேதி தொடங்க இருப்பதாக கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது.