பிரச்சாரம் மேற்கொள்ளுதல், துண்டறிக்கையை பரப்பும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபடுவது என கழக இளைஞரணி சந்திப்பு கூட்டத்தில் முடிவு

2 Min Read

சென்னை, செப். 11-  திராவிடர் கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம். 07-09-2025 அன்று காலை 11:15 மணியளவில் சென்னை பெரியார் திடலில் துரை. சக்கரவர்த்தி, நினைவு அரங்கத்தில் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமையில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சா.பிரின்சு என்னாரெசு பெரியார், ஆகியோர் கழக செயல்பாடுகள் குறித்து கருத்துரையாற்றினர்.

தமிழ்நாடு

நிகழ்வில் மாநில இளைஞரணி துணை செயலாளர்கள். செந்துறை சு.அறிவன், காஞ்சிபுரம் மு.அருண்குமார். திருவாருர் அ.ஜெ.உமாநாத், மேட்டுப்பாளையம் மு.வீரமணி, தருமபுரி மா.செல்லதுரை, தென்சென்னை  மாவட்ட இளைஞரணி தலைவர் ந. மணிதுரை, , மாவட்ட இளைஞரணி  செயலாளர் பெரியார் யுவராஜ். திருவாருர் மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.மதன், கரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கவிஞர் கவியருட் செல்வன், அரூர் மாவட்ட மேனாள் இளைஞரணி  தலைவர் த.மு.யாழ் திலிபன், அரூர் இளைஞரணி  பு.வினோத் குமார், ச.சஞ்சீவன், மேட்டுப்பாளையம் இளைஞரணி கு.தனுஷ், விக்னேஷ்குமார், மேட்டூர் மு.பிரபாகரன், ஆத்தூர் இளைஞரணி  சே.சேரன், ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துக்கள் கூறி சிறப்பித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அறிவுலக  ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவினை ( செப் – 17 சமூகநீதி நாள்) மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில்,  கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, மாநகராட்சி, பேரூராட்சி, கிராமப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்து வைத்தும், உற்சாகமாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் . தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின், அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு அதிகமான கழகத் தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு.  தகவல் பலகை அமைத்தல், பிரச்சாரம் மேற்கொள்ளுதல்,  துண்டறிக்கையை பரப்பும் பணியில் கழக இளைஞரணி தொடர்ச்சியாக செய்வது என இக்கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *