பேச்சுப் போட்டியில் பெரியார் பள்ளி மாணவி சாதனை

1 Min Read

ஜெயங்கொண்டம், செப்.11-  மாணவர்களி டையே தமிழ்ப்பற்றையும், சமூகப்பற்றையும் வளர்க்கும் விதமாக தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு 10.9.2025 அன்று  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற்ற பேச்சு போட்டியில் ஜெயங்கொண்டம்  பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவி ரா.க.விசுவதர்ஷினி கலந்து கொண்டு முதல் பரிசாக ரூபாய் அய்ந்தாயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழும் பெற்றார்.  பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்’ என்ற தலைப்பில் தனது உரையில் துல்லியமான புரிதலை வெளிப்படுத்தி நடுவர்களின் பாராட்டைப் பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *