சுயமரியாதை நூற்றாண்டு விழா மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்ள முடிவு மேட்டூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மேட்டூர், செப். 11- மேட்டூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 7.9.2025 அன்று காலை 10.30 மணிக்கு மேட்டூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கா.நாபாலு தலைமை தாங்கினார். மாவட்ட காப்பாளர் பழனி.புள்ளையண்ணன் சிறப்புரை ஆற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கோவி.அன்புமதி, அ.ப.ராஜேந்திரன், இரா.கலையரசன், மு.நேரு, கோ.சோமசுந்தரம், சோ.அமராவதி, சி.சீனிவாசன், கோ.ராதாகிருட்டினன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், கோ.குமார், ப.சி.நடராஜன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு இயக்க வளர்ச்சி பணிக்கு கருத்துரை வழங்கினர். மேலும் கீழ்க்கண்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

17.09.2025 அன்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை குடும்ப விழாவாக சிறப்பாக கொண்டாடுவது, 4.10.2025 அன்று செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாதை நூற்றாண்டு விழா மாநாட்டில் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது, உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைத்த திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க பெரியார் காப்பு அணிக்கு 5 தோழர்களை அனுப்பி வைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியில் கோ.ராதாகிருட்டினன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *