கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.9.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தேர்தல் நாள் வரைக்கும் பசி – தூக்கம் – ஓய்வை மறந்து, உழைப்பை கொடுங்கள்! ஓய்வறியாச் சூரியனாக உழைப்போம்! 2026-லும் நாமே உதிப்போம்! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

* குடியரசு துணைத் தலைவர் தேர்தல், கொள்கை ரீதியான போர், கார்கே கருத்து.

* புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் துணைத் தலைவர் பாரபட்சம் இல்லாமல்   மாநிலங்களவையில் நடந்து கொள்ள வேண்டும், தலையங்கம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது புதிய சவால்களை மதிப்பிடுவதற்காக, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு முன் சோதனை தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் திட்ட மிடப்பட்டுள்ளது

தி இந்து:

* மராத்தா ஒதுக்கீட்டில் அரசு அறிவுறுத்தல் குறித்து கவலையை எழுப்பும் வகையில், முதலமைச்சருக்கு மகாராட்டிரா கேபினட் அமைச்சர் சாகன் புஜ்பால் கடிதம். திரும்பப் பெற வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மறு நிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் கிடப்பில் போட முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அதிரடி

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *