முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் தி.ம. நாகராசன் மறைவுக்கு வருந்துகிறோம்

1 Min Read

தஞ்சை மாவட்டம், பாபநாசம், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கருப்புச்சட்டை தி.ம. நாகராசன் (வயது 92) இன்று (10.9.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

சட்ட எரிப்புப் போராட்டம் உள்பட இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்.

ஊராட்சி மன்றத் தலைவராகவும், கூட்டுறவு வங்கித் தலைவராகவும், இருந்து பொது நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, ஊரில் நற்பெயர் ஈட்டியவர்.

அவர் விரும்பியபடி தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை  அளிக்கப்படுவது – அவரின் மனிதநேயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும், கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

10.9.2025 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *