கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

10.11.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பீகார் மாநில இட ஒதுக்கீடு 75 விழுக்காடாக அதிகரிப்பு. மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறியது.

* நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் ஆவணங்கள் அதானி குழுமத்தின் இந்தியா டுடே டிவியில் ஒளிபரப் பானது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா, மக்களவை தலைவருக்கு புகார் கடிதம்.

* ஜாதிவாரி கணக்கெடுப்பு மக்களின் நிலை அறியும் எக்ஸ்-ரே. ம.பி.யில் ஆட்சிக்கு வந்ததும் கணக்கெடுப்பு நடத்துவோம், ராகுல் உறுதி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மஹூவா, எம்.பி. மீதான விசாரணை, அவசர கோலத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் மோடி ஆட்சியால் நடத்தப்படுகிறது. இது ஆபத்தான முன்மாதிரி என எதிர்க்கட்சிகள் கண்டனம்.

* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *