இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கரோனா

1 Min Read

டெல்லி, மே 30 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 224 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 500-க்கு கீழ் பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 224 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,90,054லிருந்து 4,49,90,278ஆக உயர்ந்துள்ளது. இந் தியாவில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியான நிலை யில் இதுவரை இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 5,31,866லிருந்து 5,31,867ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 429 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,53,908ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,709லிருந்து 4,503ஆக குறைந்தது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,695 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 220,67,09,286 ஆக அதிகரித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *