குஜராத்தில் தரமற்ற மேம்பாலம் தனியார் கட்டுமான நிறுவன இயக்குநர்கள் 4 பேர் கைது

1 Min Read

அகமதாபாத், மே 30 – குஜராத்தில் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் கடந்தாண்டு அக்டோபரில் அறுந்து விழுந்தது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்யும்படி குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. 

இந்த ஆய்வில் அகமதாபாத்தின் ஹட்கேஷ்வர் பகுதியில் ரூ.44 கோடி செலவில், அஜய் இன்ஜீனியரிக் கட்டுமான நிறுவனம் 2017ஆம் ஆண்டில் கட்டிய சத்ரபதி சிவாஜி மகராஜ் மேம்பாலம் 5 ஆண்டுகளில் மிகவும் சேதமடைந்து மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத ஆபத்தான நிலையில் இருப்பது கண்டறியப் பட்டது. இதனைத் தொடர்ந்து, நிபுணர்கள் குழு மேற் கொண்ட ஆய்வில் அந்த பால கட்டுமானத்தின் போது தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஷிக் படேல், ரமேஷ் படேல், சிராக் படேல், கப்லேஷ் படேல் ஆகிய 4 இயக்குநர்களையும் கோக்ரா காவல் துறையினர் கைது செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *