மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் நீடாமங்கலம் நகரத் தலைவர் முல்லை வாசல் பெரியார் பெருந்தொண்டர் பி.எஸ்..ஆர். அமிர்தராஜ், சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஆறு மாதம் சிறைத் தண்டனை அனுபவித்த எடமேலையூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சவுந்தர்ராஜன் ஆகியோர் அண்மையில் மறைவுற்றனர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார் , தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட துணைசெயலாளர் அ. உத்திராபதி ஆகியோர் 25.5.2023 அன்று மறைந்த பெரியார் பெருந்தொண்டர்களின் இல்லங்க ளிற்கு சென்று அவர்களது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித் தனர்.