செங்கோட்டையன் மீது நடவடிக்கையா? ஆயிரத்திற்கு மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் விலகல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஈரோடு, செப்.8-  செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து 1,000-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் பதவி விலகுவதாக கடிதம் கொடுத்தனர்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடுவிதித்த மேனாள் அமைச்சர் செங்கோட்டையனின், அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளைப் பறித்து பழனிசாமி அறிவித்தார். அவருடன், கோபி, நம்பியூரைச் சேர்ந்த சில நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், கோபி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் 1,000-க்கும் மேற்பட்டோர் கோபி அதிமுக அலுவலகத்துக்கு வந்து, செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து பதவி விலகுவதாக கடிதம் கொடுத்தனர்.

அதில், “அ.தி.மு.க பழைய வலிமையை பெற வேண்டும். வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பயனுள்ள ஆட்சியைத் தர வேண்டும். இந்த நல்ல நோக்கம் நிறைவேற அ.தி.மு.க ஒன்றுபட வேண்டும்.

இதற்காக கட்சியிலி ருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இதற்காக அவரை பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எங்களது கட்சிப் பதவிகளில் இருந்து விலகுகிறோம். கட்சி ஒன்றுபட்டால் பதவியில் நீடிப்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளரும், மேனாள் எம்.பி.யுமான சத்தியபாமாவும், கட்சி பொறுப்புகளில் இருந்து பதவி விலகுவதாக நேற்று (7-9-2025) தெரிவித்தார். இதற்கிடையில், செங் கோட்டையன் விதித்த கெடு வரும் 15ஆம் தேதி நிறைவடைகிறது.

அதுவரை கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க முடிவு செய்துள்ள செங்கோட்டையன், பின்னர் சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டவர்களைச் சந்தித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *