ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படம் சிறப்பு சிபிஅய் செயலாளர் இரா.முத்தரசன் வரவேற்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, செப். 8- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலா ளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெரியார் உருவாக்கிய சுயமரி யாதை இயக்கம் இன்று உலகளவில் சமூகநீதிப் போராளிகளுக்கு கருத் தாயுதமாக பயன்பட்டு வருகிறது. இங்கிலாந்து நாட்டில் பல நுற்றாண்டுகளாக இயங்கி வரும் உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் பேரறிஞர்களை போற்றி பாராட்டி வந்திருக்கிறது.

அந்த வரிசையில், கடந்த 4ஆம் தேதி பெரியாரின் உருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பெரியாரின் சிறப்புகளை எடுத்துக்கூறியிருப்பது பொருத்தமானதாகும். இந்த நிகழ்ச்சியில் சுயமரியாதை இயக்கத்தின் ஆற்றல் மிகுந்த பங்களிப்பு தொடர்பான 2 ஆய்வுப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமையளிக்கும் நிகழ்வாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *