அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க செப்.30 வரை அவகாசம்

1 Min Read

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூன் 20இல் தொடங்கியது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வகுப்புகள் துவங்கிய நிலையில், பல்வேறு சூழல்களால் யாரேனும் விண்ணப்பிக்க தவறியிருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு அல்ல, குஜராத்தில்தான்

மாணவர்கள் பையில்
காண்டம்ஸ், கத்தி… அதிர்ச்சி!

அகமதாபாத்தில் பள்ளி ஒன்றில் மாணவர்களின் பைகளை பரிசோதித்த ஆசிரியர்களுக்கு ஒரே அதிர்ச்சி. காரணம், பைகளில் நோட்டு புத்தகங்கள் தவிர காண்டம்ஸ், கருத்தடை மாத்திரைகள், ஆல்கஹால், ஆபாசப் புத்தகங்கள், பணம், ஆடம்பர பொருள்கள் உள்பட பல்வேறு பொருள்கள் இருந்துள்ளன. இதற்கெல்லாம் முக்கிய காரணம், சிறுவயதிலேயே இணைய வலைதளத்தில் தேவையில்லாத நிறைய விஷயங்களை குழந்தைகள் பார்ப்பதுதான் என உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *