27.10.2023 அன்று வேலூரில் நடைபெற்ற “மனுதர்ம யோஜனா” எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வேலூர் மாவட்ட காப்பாளர்கள் குடியாத்தம் வி.சடகோபன், ஈஸ்வரி இணையர் 5 விடுதலை ஆண்டு சந்தாக்கள் வழங்கினர்.
– – – – –
வேலூர் மாவட்ட கழக காப்பாளர்கள் வி.சடகோபன் – ஈஸ்வரி இணையரின் மகள், குடியாத்தம் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியின் செயலாளர், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.இரம்யா-ந.கண்ணன் (கழக இளைஞரணி) இணையரின் 25ஆம் ஆண்டு இணையேற்பு நாள் (06.09.2023) மகிழ் வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.
– – – – –
குடியாத்தத்தில் நீண்டநாள் விடுதலை வாசகரும், பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் பற்றாளருமான தோழர் கே.எம்.இராஜேந்திரன் அவர்களின் 88ஆவது பிறந்தநாள் (30.09.2023) மகிழ்வாக பெரியார் உலகம் நிதியாக ரூ.1000 வேலூர் மாவட்ட காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் அவர்களிடம் வழங்கினார்.
– – – – –
பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் பெரியார் பெருந் தொண்டர் சர்புதீன் விடுதலை ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூபாய் இரண்டாயிரத்தை தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வனிடம் வழங்கினார். (பெரம்பலூர் 5.11.2023)
– – – – –
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் வீ.இரவிக்குமார் விடுதலை ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூபாய் இரண்டாயிரத்தை தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வனிடம் வழங்கினார். (பெரம்பலூர் 5.11.2023)