நன்கொடை – சந்தா

1 Min Read

27.10.2023 அன்று வேலூரில் நடைபெற்ற “மனுதர்ம யோஜனா” எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  வேலூர் மாவட்ட காப்பாளர்கள் குடியாத்தம் வி.சடகோபன், ஈஸ்வரி இணையர் 5 விடுதலை ஆண்டு சந்தாக்கள் வழங்கினர்.

– – – – –

மற்றவை

வேலூர் மாவட்ட கழக காப்பாளர்கள் வி.சடகோபன் – ஈஸ்வரி இணையரின் மகள், குடியாத்தம் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியின் செயலாளர்,  மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.இரம்யா-ந.கண்ணன் (கழக இளைஞரணி) இணையரின் 25ஆம் ஆண்டு இணையேற்பு நாள் (06.09.2023) மகிழ் வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.

– – – – –

குடியாத்தத்தில் நீண்டநாள் விடுதலை வாசகரும், பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் பற்றாளருமான தோழர் கே.எம்.இராஜேந்திரன் அவர்களின் 88ஆவது பிறந்தநாள் (30.09.2023) மகிழ்வாக பெரியார் உலகம் நிதியாக ரூ.1000 வேலூர் மாவட்ட காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் அவர்களிடம் வழங்கினார்.

– – – – –

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் பெரியார் பெருந் தொண்டர் சர்புதீன் விடுதலை ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூபாய் இரண்டாயிரத்தை தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வனிடம் வழங்கினார். (பெரம்பலூர் 5.11.2023)

– – – – –

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் வீ.இரவிக்குமார் விடுதலை ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூபாய் இரண்டாயிரத்தை தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வனிடம் வழங்கினார். (பெரம்பலூர் 5.11.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *