லண்டனில் அம்பேத்கர் தங்கிய வீட்டை பார்வையிட்டு மகிழ்ந்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

லண்டன், செப்.7– லண்டனில் அம்பேத்கர் இல்லத்தை சுற்றிப் பார்த்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு இருந்த அரிய ஒளிப் படங்களை பார்த்து ரசித்தார்.

அம்பேத்கர் இல்லம்

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். இந்த நிலையில், அவர் அம்பேத்கர் லண்டனில் படித்தபோது தங்கியிருந்த வீட்டை பார்வையிட்டார்.

பின்னர், அதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஒளிப்படங்களை வெளியிட்டு பதிவிட்டுள்ளதில் கூறியிருப்பதாவது:-

பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் லண்டன் பொருளியல் பள்ளியில் (எல். எஸ்.இ.) படிக்கும் போது, தங்கி இருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இல்லத்தைப் பார்வையிடும் வாய்ப்பினைப் பெற்றேன்.

மிகவும் சிலிர்ப்பூட்டியது

அந்த இல்லத்தின் அறைக ளின் உள்ளே நடந்து செல்லும்போது பெரும் வியப்பு என்னுள் மேலோங்கியது.

இந்தியாவில் ஜாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞன், இங்கு தான் தனது அறிவால் வளர்ந்து, லண்டனில் அனைவரது மரியாதையையும் பெற்று, பின்னர் இந்தியாவின் அரசியல் அமைப்பையே வடித்துத் தரும் நிலைக்கு உயர்ந்தார்.

குறிப்பாக, தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒளிப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப் பூட்டியது.

இப்படியொரு உணர்வு எழுச்சி மிகுந்த தருணம் வாய்க்கப் பெற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்!

ஜெய் பீம்!

இவ்வாறு அதில் பதிவிட்டு இருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *